அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

பாசிஸத்தின் மீதான மோடியின் மௌனம் ஜனநாயகத்தை அழித்துவிடும்!



பாசிஸத்தின் மீதான மோடியின் மௌனம் ஜனநாயகத்தை அழித்துவிடும்!

                                     (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

எந்த பாசிஸம் நாட்டின் அரியணையில் ஏறி விடக்கூடாதென்று கவலைப்பட்டோமோ? அந்த பாசிஸம் மோடியின் உருவத்தில் தேசத்தின் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து விட்டது.

மோடி ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நெருங்கும் வேளையில் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்களால் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் சட்டத்தின் பெயராலும் கலவரத்தின் பெயராலும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற ஜனநாயக படுகொலைகளை கண்டித்த எழுத்தாளர் கல்புர்கி,மாணவர் ரோஹித் வெமுலா போன்றவர்களின்
சாவுக்கு பாசிஸமே காரணமாக இருந்துள்ளது.

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நாட்டு மக்கள் நிம்மதி இல்லாமல் ஒரு வித பதட்டமான சூழலில் வாழக்கூடிய அவல நிலையே தொடர்கிறது.

பாசிஸ பயங்கரவாதிகளால் காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரஷீது தொடர்ந்து தாக்கப்படுவதும்,மாட்டுக்கறியின் பெயரால் அக்லாக் போன்ற அப்பாவிகள் கொல்லப்படுவதும் மோடி ஆட்சியில் தொடர்கதையாகி வருவது வேதனையாக உள்ளது. 

பாசிஸத்தின் அராஜங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர நினைக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்களின் மீது தேச விரோத பொய் வழக்கு போடுவதும்,அவர்களை சிறையிலடைப்பதும் போன்ற ஜனநாயக விரோத செயல்களை பல்வேறு நாட்டவரும் கண்டிக்கும் அவலநிலையே தொடர்கிறது.

மோடி பிரதமராக பொறுப்பேற்ற ஓராண்டு காலம் உலகின் பல்வேறு நாடுகளையும் சுற்றி பார்த்து விட்டு பல லட்சம் கோடி அந்நிய முதலீடுகளை தேசத்திற்கு கொண்டு வந்ததை போன்ற நாடகம் நடந்தேறி இரண்டாண்டுகள் நிறைவடைய போகும் நிலையில் ஏதாவதொரு அந்நிய முதலீடாவது தேசத்திற்குள் வந்துள்ளதா?

முதலீடு செய்ய விரும்பிய பல்வேறு நாட்டவரும் இந்தியாவில் தற்போது நிலவி வரும் சகிப்பின்மையை காரணம் காட்டி ஓடி ஒளிந்துகொள்ளும் அவலநிலை தான் நீடிக்கிறது.

தற்போது சட்டமன்ற தேர்தல்கள் நடக்கவிருக்கும் தமிழ்நாடு,கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் தமது ஆளுமையை நிலை நிறுத்த பாசிஸ பரிவாரங்கள் பல்வேறு கோணத்தில் வகுப்பு மோதல்களை உண்டாக்கி அரசியல் ஆதாயம் பெற துடிக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சி என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பல்வேறு மதம்,மொழி,கலாச்சாரம் சார்ந்து வாழும் மக்களின் மூலமே சாத்தியமாகும் என்ற உண்மையை சகித்து கொள்ள முடியாமல் பாசிஸத்தின் மூலமே சாத்தியமாகும் என நினைத்தால்....

இந்திய தேசத்தின் ஜனநாயகம் அழுகி அழிந்து விடும் பேராபத்து தான் ஏற்படும்.

பாசிஸத்தின் மீதான தமது மௌனத்தை மோடி கலைத்து விட்டு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து மீதியுள்ள மூன்று ஆண்டு நிர்வாகத்தையும் தேசத்தின் மீதான வளர்ச்சியில் கொண்டு செலுத்த வேண்டுகிறேன்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய 'நிமிர்ந்து நில் - மண்டியிடாதே' மாபெரும் கருத்தரங்கம்!


இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய 'நிமிர்ந்து நில் - மண்டியிடாதே' மாபெரும் கருத்தரங்கம்!

சவூதி அரேபியா - கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்த SDPI கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் மௌலவி தெஹலான் பாகவி அவர்களுக்கு இந்தியன் சோஷியல் ஃபோரம் - தமிழ் கமிட்டி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக SDPI கட்சி இந்தியா முழுக்க நடத்திவரும் 'நிமிர்ந்து நில் - மண்டியிடாதே' என்ற பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக தம்மாம் பகுதியிலும் கருத்தரங்கம் நடைபெற்றது.

14-ஜனவரி, 2016 அன்று இரவு 8:30 மணிக்கு அல் கோபர் - ரஃபா மெடிக்கல் சென்டர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு
இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தமிழக தலைவர் காயல் அபூபக்கர் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியை இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தமிழக பொதுச் செயலாளர் காயல் மக்தூம் நைனா தொகுத்து வழங்கினார்.

தம்மாம் கிளைத் தலைவர் நல்லூர் சைபுல்லாஹ்  வரவேற்புரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து கிழக்கு மாகாணத் துணைத் தலைவர் மௌலவி இக்பால் மன்பஈ அறிமுக உரை ஆற்றினார். 

மாநிலத் தலைவர் மௌலவி தெஹலான் பாகவி அவர்களை கண்ணியப்படுத்தும் முகமாக தம்மாம், கோபர், சிஹாத், ஜூபைல், அல்ஹஸா கிளைகளின் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக இந்தியன் சோசியல் ஃபோரம் கிழக்கு மாகாண தேசிய தலைவர் சகோ.வசீம்(கர்நாடகா)மற்றும் இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் தலைவர் சகோ. சாதிக் மீரான் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து கட்சியின் தமிழ் மாநிலத்தலைவர் மௌலவி தெஹ்லான் பாகவி  'நிமிர்ந்து நில், மண்டியிடாதே!' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

அவர் தமது உரையில் இந்திய தேசிய அளவில் கட்சியின் அவசியத்தையும் அது முன்னெடுத்துச் செல்லும் நேர்மறை அரசியலையும், சமகால அளவில் அனைத்து சமூகத்தினருக்குமான பொதுவான பிரச்சனைகளை அணுகும் முறைகளையும் அழகாக எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாநிலங்களுக்கான தலைவர் சகோ.வசீம்  தலைவருக்கு நினைவுப் பரிசினை வழங்கி கவுரவித்தார்.

SDPI கட்சியின் அதிகாரப்பூர்வ மாதமிருமுறை பத்திரிக்கையான 'புதிய பாதை' சந்தா சேர்ப்பு இயக்கத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற சந்தாக்களின் முதல் பகுதியை கிளை நிர்வாகிகள் தலைவரிடம் ஒப்படைத்தனர்.

அல்கோபர் கிளைத் தலைவர் அதிரை அபுபக்கர்  நன்றியுரை கூறினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

தகவல்:கீழை அரூஸி

புதன், 9 டிசம்பர், 2015

நாட்டின் சகிப்புத்தன்மையை பாதுகாக்க மோடி அரசு முன்வர வேண்டும்:இந்தியன் சோஷியல் ஃபோரம் கோரிக்கை!

நாட்டின் சகிப்புத்தன்மையை பாதுகாக்க மோடி அரசு முன்வர வேண்டும்:இந்தியன் சோஷியல் ஃபோரம் கோரிக்கை!

முஸ்லிம்களின் வழிபாட்டு தலமான பாபர் மசூதியை கடந்த 1992 டிசம்பர் 6ம் தேதி சங்பரிவார கும்பல் இடித்து தரை மட்டமாக்கியதை கண்டித்து ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி நினைவு தினம் அனுசரிப்பு இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் இந்திய முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகிறது.

சவூதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் தமிழ் பிரிவின் அல்ஹஸ்ஸா மாவட்டம் சார்பில் அல்ஹஸ்ஸா இஸ்திஹாராவில் பகல் 1 மணிக்கு  நடைபெற்ற பாபர் மசூதி நினைவு தின கருத்தரங்கில் அல்ஹஸ்ஸா கிளை தலைவர் யூசுப்கான் தலைமையேற்று அறிமுக உரையாற்றினார்.முன்னதாக ரபீக் இறைமறை வாசித்தார்.இந்தியன் சோஷியல் ஃபோரம் மாநில செயற்குழு உறுப்பினர் அதிரை ரியாஸ் அகமது வரவேற்றார்.

கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் பொதுசெயலாளர் காயல் மக்தூம் நைனா பாபர் மசூதி மீட்பு பாடலை பாடினார்.இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தேசிய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி சிறப்புரையாற்றினார்.

அவர் தமது உரையின் போது:வேற்றுமையில் ஒற்றுமையே தேசத்தின் பலம் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒவ்வொரு சமூகத்தவரின் உரிமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு என்பதை உணர்ந்து முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தினார்.

முஸ்லிம்களின் வழிபாட்டு தலமான பாபர் மசூதியை இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் புதுப்பொலிவுடன் கட்டி நாட்டின் சகிப்புத்தன்மையை பாதுகாக்க மோடி அரசு முன்வர வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்.

லிபரான் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது முஸ்லிம்களுக்கு செய்துவரும் மிகப்பெரிய அநீதியாகும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் கேரளா,டெல்லி.கர்நாடகா மாநில பிரிவுகளின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.இந்தியன் சோஷியல் ஃபோரம் அல்ஹஸ்ஸா பொதுசெயலாளர் ஜின்னா நன்றி கூறினார்.

செவ்வாய், 8 டிசம்பர், 2015

தம்மாம் மாநகரில் பாபர் மசூதி என்றும் நம் நினைவில் மாபெரும் கருத்தரங்கம்!



தம்மாம் மாநகரில் பாபர் மசூதி என்றும் நம் நினைவில் மாபெரும் கருத்தரங்கம்!


முஸ்லிம்களின் வழிபாட்டு தலமான பாபர் மசூதியை கடந்த 1992 டிசம்பர் 6ம் தேதி சங்பரிவார கும்பல் இடித்து தரை மட்டமாக்கியதை கண்டித்து ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி நினைவு தினம் அனுசரிப்பு இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் இந்திய முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகிறது.

சவூதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் தமிழ் பிரிவின் தம்மாம்-சிஹாத்-கோபார் உள்ளிட்ட மாவட்டங்களின் சார்பில் தம்மாம் பதர் அல் ராபியா ஆடிட்டோரியத்தில் மாலை 7.30 மணியளவில் கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் தலைவர் சாதிக் மீரான் தலைமையில் நடைபெற்றது.

சகோதரர் சம்சுதீன் இறைமறை வாசிக்க பொதுசெயலாளர் அப்சர் ஹுசைன் வரவேற்புரையாற்றினார்.நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதோடு அறிமுக உரையாற்றிய தம்மாம் கிளை தலைவர் முகம்மது பைசல் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்டப்படுவதுதான் இந்திய இறையாண்மைக்கு நாடு செய்யும் மரியாதை என்றார்.

சகோதரர் நாகூர் மீரான் சிறப்புரையாற்றினார்.அவர் தமது உரையின் போது:-பாபர் மசூதி இடிக்கப்பட்டு 23 ஆண்டுகளாகியும் இன்னும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றார்.அரபுநாடுகளில் கோயில் கட்ட ஆசைபடும் பிரதமர் மோடி தமது நாட்டில் சங்பரிவாரங்களால் இடிக்கப்பட்ட முஸ்லிம்களின் பாபர் மசூதியை கட்டி கொடுக்க முன்வராதது ஏன்?என்றும் கேள்வி எழுப்பினார்.

கோபார் கிளை செயலாளர் அகமது மீரான் நன்றியுரை கூறினார்.கூட்டத்தில் இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண ஊடக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜஹாங்கீர் அரூஸி,தமிழ் மாநில தலைவர் காயல் அபுபக்கர்,பொதுசெயலாளர் காயல் மக்தூம் நைனா,இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம்,இந்தியன் சோஷியல் ஃபோரம் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்:கீழை அரூஸி
Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket