தம்மாம் மாநகரில் பாபர் மசூதி என்றும் நம் நினைவில் மாபெரும் கருத்தரங்கம்!
முஸ்லிம்களின் வழிபாட்டு தலமான பாபர் மசூதியை கடந்த 1992 டிசம்பர் 6ம் தேதி சங்பரிவார கும்பல் இடித்து தரை மட்டமாக்கியதை கண்டித்து ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி நினைவு தினம் அனுசரிப்பு இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் இந்திய முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகிறது.
சவூதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் தமிழ் பிரிவின் தம்மாம்-சிஹாத்-கோபார் உள்ளிட்ட மாவட்டங்களின் சார்பில் தம்மாம் பதர் அல் ராபியா ஆடிட்டோரியத்தில் மாலை 7.30 மணியளவில் கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் தலைவர் சாதிக் மீரான் தலைமையில் நடைபெற்றது.
சகோதரர் சம்சுதீன் இறைமறை வாசிக்க பொதுசெயலாளர் அப்சர் ஹுசைன் வரவேற்புரையாற்றினார்.நிகழ்ச்சி யை தொகுத்து வழங்கியதோடு அறிமுக உரையாற்றிய தம்மாம் கிளை தலைவர் முகம்மது பைசல் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்டப்படுவதுதான் இந்திய இறையாண்மைக்கு நாடு செய்யும் மரியாதை என்றார்.
சகோதரர் நாகூர் மீரான் சிறப்புரையாற்றினார்.அவர் தமது உரையின் போது:-பாபர் மசூதி இடிக்கப்பட்டு 23 ஆண்டுகளாகியும் இன்னும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றார்.அரபுநாடுகளில் கோயில் கட்ட ஆசைபடும் பிரதமர் மோடி தமது நாட்டில் சங்பரிவாரங்களால் இடிக்கப்பட்ட முஸ்லிம்களின் பாபர் மசூதியை கட்டி கொடுக்க முன்வராதது ஏன்?என்றும் கேள்வி எழுப்பினார்.
கோபார் கிளை செயலாளர் அகமது மீரான் நன்றியுரை கூறினார்.கூட்டத்தில் இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண ஊடக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜஹாங்கீர் அரூஸி,தமிழ் மாநில தலைவர் காயல் அபுபக்கர்,பொதுசெயலாளர் காயல் மக்தூம் நைனா,இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம்,இந்தியன் சோஷியல் ஃபோரம் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்:கீழை அரூஸி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக