அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

திங்கள், 22 அக்டோபர், 2012

தமிழக அரசின் சூரிய சக்தி கொள்கை வரவேற்கத்தக்கது !


SDPI மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி இன்று(22.10.2012) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழகம் மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. தமிழக மக்களும் மின்வெட்டால் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
மின் உற்பத்திக்கு அணல் மற்றும் அணு மின்சாரத்தை மாத்திரமே மத்திய மாநில அரசுகள் சார்ந்து நிற்கின்றன. மாற்று மின் உற்பத்தி திட்டங்களுக்கு அரசுகள் போதிய கவனம் செலுத்துவதுமில்லை. திட்டமிடுவதுமில்லை .
சூர்யமின்சக்தி அணல் மற்றும் அணுமின் சக்திகளை போன்று மக்களுக்கு எந்தவித பாதிப்புகளையும், ஆபத்துகளையும் ஏற்படுத்தாத மின் சக்தி ஆகும் .
சூர்யமின்சக்தி மூலம் மின்சார உற்பத்தி செய்ய மத்திய மாநில அரசுகள் இதுவரை உரிய திட்டங்களை செயல்படுத்தவில்லை. அப்படி செயல்படுத்தினால் சூர்யமின்சக்தி மூலம் நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவை பெற முடியும். அதற்க்கான வாய்ப்பும் சூழலும் நமது நாட்டிற்கும் மாநிலத்திற்கும் உள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ‘சூர்ய சக்தி கொள்கை 2012 ‘ என்ற திட்டத்தை வெளியிட்டுள்ளார் . மூன்றாண்டுகளில் மூவாயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை பெற கூடிய இத்திட்டம் வரவேற்கத்தக்கது.
இது வெறும் அறிவிப்போடு மாத்திரம் நின்று விடாமல் முழுமையாக் செயல்படுத்த தீவிர கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசை ­கேட்டு கொள்கிறேன் .  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket