சவூதி அரேபியா அல்ஜுபைலில் பாபர் மசூதி நினைவு தின கருத்தரங்கம்!
முஸ்லிம்களின் வழிபாட்டு தலமான பாபர் மசூதியை கடந்த 1992 டிசம்பர் 6ம் தேதி சங்பரிவார கும்பல் இடித்து தரை மட்டமாக்கியதை கண்டித்து ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி நினைவு தினம் அனுசரிப்பு இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் இந்திய முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகிறது.
சவூதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் தமிழ் பிரிவின் அல்ஜுபைல் மாவட்டத்தின் சார்பில் கிளாசிக் ஹோட்டல் ஆடிட்டோரியத்தில் மாலை 7.30 மணிக்கு நடைபெற்ற பாபர் மசூதி நினைவு தின கருத்தரங்கில் இஸ்ஹாக் தலைமை வகித்தார்.மௌலவி இக்பால் மன்பஈ இறைமறை வாசிக்க ஜுபைல் கிளையின் செயலாளர் சலீம் அறிமுக உரையாற்றினார்.
இந்திய தவ்ஹீது ஜமாஅத்தின் முன்னாள் மாநில பொருளாளர் தொண்டியப்பா என்கிற அபுபக்கர் வாழ்த்துரை வழங்கினார்.இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தேசிய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி சிறப்புரையாற்றினார்.
பாபர் மசூதி இடிப்பின் மூலம் இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கியவர்கள் உடனடியாக அந்த இடத்திலேயே மீண்டும் மசூதியை கட்டி தர வேண்டுமென்று வலியுறுத்தும் பாடலை சிறுவன் ஹனீப் பாடியது உருக்கமாக இருந்தது.
ரபீக் நன்றியுரையுடன் கருத்தரங்கம் நிறைவு பெற்றது.
கூட்டத்தில் இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மகாண தமிழ் பிரிவின் மாநில தலைவர் காயல் அபுபக்கர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல்:கீழை அரூஸி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக