அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

செவ்வாய், 8 டிசம்பர், 2015

சவூதி அரேபியா அல்ஜுபைலில் பாபர் மசூதி நினைவு தின கருத்தரங்கம்!

சவூதி அரேபியா அல்ஜுபைலில் பாபர் மசூதி நினைவு  தின கருத்தரங்கம்!


முஸ்லிம்களின் வழிபாட்டு தலமான பாபர் மசூதியை கடந்த 1992 டிசம்பர் 6ம் தேதி சங்பரிவார கும்பல் இடித்து தரை மட்டமாக்கியதை கண்டித்து ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி நினைவு தினம் அனுசரிப்பு இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் இந்திய முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகிறது.

சவூதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் தமிழ் பிரிவின் அல்ஜுபைல் மாவட்டத்தின் சார்பில் கிளாசிக் ஹோட்டல் ஆடிட்டோரியத்தில் மாலை 7.30 மணிக்கு நடைபெற்ற பாபர் மசூதி நினைவு தின கருத்தரங்கில் இஸ்ஹாக் தலைமை வகித்தார்.மௌலவி இக்பால் மன்பஈ இறைமறை வாசிக்க ஜுபைல் கிளையின் செயலாளர் சலீம் அறிமுக உரையாற்றினார்.

இந்திய தவ்ஹீது ஜமாஅத்தின் முன்னாள் மாநில பொருளாளர் தொண்டியப்பா என்கிற அபுபக்கர் வாழ்த்துரை வழங்கினார்.இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தேசிய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி சிறப்புரையாற்றினார்.

பாபர் மசூதி இடிப்பின் மூலம் இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கியவர்கள் உடனடியாக அந்த இடத்திலேயே மீண்டும் மசூதியை கட்டி தர வேண்டுமென்று வலியுறுத்தும் பாடலை சிறுவன் ஹனீப் பாடியது உருக்கமாக இருந்தது.

ரபீக் நன்றியுரையுடன் கருத்தரங்கம் நிறைவு பெற்றது.

கூட்டத்தில் இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மகாண தமிழ் பிரிவின் மாநில தலைவர் காயல் அபுபக்கர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்:கீழை அரூஸி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket