சேலம் அம்மாபேட்டை மண்டலத்திற்கு உற்பட்ட கிச்சிப்பாளையம் ,பச்சப்படி ,அம்மாபேட்டை ,பொன்னம்மா பேட்டை .அசோக் நகர் ,முஹம்மது புரா,நாராயண நகர் போன்ற பகுதிகளில் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றது ,வைரஸ் காய்ச்சல் ,டெங்கு போன்ற காய்ச்சல்களும் பரவி வருகின்றது .தொடர்ந்து இந்த பகுதிகளில் சுகாதரத்தை மேம்படுத்துவதில் மாநகராட்சி நிர்வாகம் மெத்தன போக்காகவே செயல்பட்டு வருகின்றது .இதற்க்கு முக்கிய காரணங்களாவன ,குப்பை தொட்டிகள் இல்லை ,குப்பை சரிவர அல்லாமல் ரோடுகளில் தேங்கி நிற்கிறது ,கழிவுநீர் செல்வதற்கு சரியான சாக்கடை வசதி இல்லாமை .இதனால் கொசுக்கள் அதிகரித்து வருகின்றது .
மேலும் மக்கள் அதிகம் நடமாடும் இடமாக உள்ள மூன்று தியேட்டர் அருகில் உள்ள டாஸ்மாக் மது பான கடை ,வ .உ .சி மார்கெட் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் இவை வழிபாட்டு தளங்களான கோவில்கள் ,மக்கள் அதிகமாக பயன்படுத்த கூடிய இடமாக உள்ளது .இந்த கடைகள் மூலமாக பல்வேறு வன்முறைகள் ,வழிப்பறிகள் ,சண்டை சச்சரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனே தலையிட்டு இந்த பகுதிகளில் சாக்கடை வசதிகளை மேம்படுத்தவும் ,ரோடு வசதிகளை சரி செய்யவும் ,மின் விளக்கு இல்லாத இடத்தில் மின் விளக்குகளை அமைக்கவும் மக்களுக்கு இடையூறாக உள்ள பன்றிகள் ,மற்றும் குப்பைகள் ,கொசு மதுபான கடைகள் இவற்றை அகற்ற கோரி SDPI மாவட்ட தலைவர் முஹம்மது ரபி அவர்கள் சேலம் மாவட்ட மாநகராட்சி உதவி ஆணையரிடம் மனு கொடுத்தார் .இதில் மாவட்ட பொது செயலாளர் ஷெரிப் ,மாவட்ட கிளை நிர்வாகிகள் ,SDPI செயல்வீரர்கள் ஆகியோர் உடன் சென்றனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக