சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே கடந்த சில தினங்களாக கவலைக்கிடமான நிலையில் இருந்தார். அவர் இறந்து விட்டார் என்றும்,இல்லை நல்ல நிலையில் உள்ளார் என்றும் இருவேறு தகவல்களால் மக்கள் குழப்பமடைந்தனர். மரணமடைந்த செய்தியால் வன்முறை ஏற்பட்டு விடும் என அஞ்சியே மரணமடைந்த செய்தி வெளியிடபடாமல் மறைக்கப்பட்டது என்ற தகவலும் வெளியானது.
இந்நிலையில் இன்று (17.11.2012 ) மாலை 3.33 மணிக்கு அவர் மரணமடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் அவரைப் பற்றி கடந்த சில தினங்களாக நிலவி வந்த சந்தேகமும் பரபரப்பும் தீர்ந்துள்ளது.
இதன் பின் தீவிர இந்துத்துவ அரசியலை மேற்கொண்டார். சங்கபரிவாலர்களின் தலைவர்களில் ஒருவராக தன்னை காட்டி கொண்டார். பாபர் மஸ்ஜித் இடிப்பிற்கு பகிரங்க ஆதரவை தெரிவித்தார்.
பாபர் மஸ்ஜித் இடிப்பை தொடந்து நடைபெற்ற மும்பை கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்களின் நிறுவனங்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டன . இந்த கலவரத்துக்கு பால்தாக்கரேயின் சிவசேனையை காரணமாக சொல்லப்பட்டது.
கடந்த சில வருடங்களாக வட இந்தியர்களுக்கு எதிராகவும் தனது கருத்துக்களை தெரிவித்து பரபரப்பையும்,பதட்டத்தையும் ஏற்ப்படுத்தினார்.
1995 ல் மகராஷ்டிராவில் ஏற்ப்பட்ட பா. ஜ.க கூட்டணி ஆட்சிக்கு இவரே காரணம் என சொல்லப்பட்டது. .இப்படி பல்வேறு பரிணாமங்களை கொண்ட பால் தாக்கரே இன்று மரணம் அடைந்தார்.
அவரின் குடும்பமும் சிவசேனையும் இன்றைக்கும் மும்பையின் அதிகார பூர்வமில்லாத அதிகார சக்தியாக வளர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக