அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

புதன், 24 அக்டோபர், 2012

டெங்கு காய்ச்சல் தீவிரம் :தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை தேவை !


  எஸ் .டி பி ஐ மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி இன்று (23.10.2012) வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவி வருகிறது. இதனால் பலர் பலியாகிவருகின்றனர் .
தமிழக அரசு இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதையே தற்போதைய நிலைமை எடுத்து காட்டுகிறது .
அதிகாரிகள் டெங்கு பாதிப்பு இல்லை என்பதை காட்டுவதில்தான் அக்கறையோடு உள்ளனர். மாறாக டெங்கு அறிகுறி உள்ளவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்குவது பற்றி அக்கறை காட்டவில்லை என்றே மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது சம்பந்தமாக 20 .10 .2012 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் (மதுரை)ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது .
அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் உரிய மருந்துகள் கையிருப்பு உள்ளதா என்பதையும், அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகள் முறையாக அனுமதிக்கப்பட்டு உரிய முறையில் சிக்கிச்சை அளிக்கப்படுகிறார்களா என்பதையும் அரசு கவனிக்க வேண்டும் .
முன்னெச்சரிக்கையின்றி செயல்பட்ட அதிகாரிகளை கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு எதிர் காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டும்.
மேலும் ,அரசு போர் கால அடிப்படையில் செயல்பட்டு டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த வேண்டும் எனக் கேட்டு            கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket